மறைந்த நமது முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா !

👸 தமிழ்நாடு, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஊரை பூர்வீகமாக கொண்ட மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கர்நாடக மாநிலம் பெங்கள+ருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேல் கோட்டை கிராமத்தில் பிறந்தவர் என்றாலும், அவருடைய முன்னோர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
👸 முதலில் பெங்கள+ர் பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்த ஜெயலலிதா, பின்னர் சென்னையில் சர்ச் பார்க் கான்வென்டில் படிப்பைத் தொடர்ந்தார்.
👸 1964-ம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேறிய ஜெயலலிதா, தாய் மொழி தமிழைப்போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார்.
👸 வெண்ணிற ஆடை படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.
👸 பின்னர், அ.தி.மு.க.வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார்.
👸 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார். எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின் மறைவுக்கு பிறகு 1989 ஆண்டில் அ.தி.மு.கவின் தலைமைப்பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.
👸 1989 முதல் 1991வரை சட்ட மன்ற எதிர்கட்சி தலைவராக பணியாற்றினார்.
👸 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் மே 12, 2006 வரையிலும் தமிழக முதல்வராகவும் இருந்தார்.
👸 2011ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்று மீண்டும் முதல்வரானார்.
👸 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டு 134 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.
👸 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது 2016இல் தான்.
👸 மேலும் 2016 ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 4 உறுப்பினர்களை அனுப்பியதன் மூலம், நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பலம் 50 ஆக உயர்ந்தது.
👸 இது தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்யாத சாதனை.
👸 அது மட்டுமின்றி 2011 சட்டமன்ற தேர்தல், 2011 உள்ளாட்சித் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் என தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் பெரும்பாலும் தனித்து நின்று ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெற்றிவாகை சூடியது.
புனைப்பெயர்கள் :
👸 அம்மு என்று குடும்பத்தினரால் அழைக்கப்பட்டார். 1991 தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வெற்றி பெற்று முதல்வரான பின்னர் மரியாதை கருதி அம்மா என்று தொண்டர்களால் அழைக்கப்படுகிறார்.
புரட்சித்தலைவர் என்றழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ம. கோ. ராமச்சந்திரனின் அரசியல் வாரிசாக கருதப்படுவதால், புரட்சித் தலைவி என்றும் அழைக்கப்படுகிறார்.
மருத்துவமனையில் அனுமதி
👸 22 செப்டம்பர் 2016 அன்று காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த செல்வி.ஜெ.ஜெயலலிதா சிகிச்சை பலன் இன்றி 05-12-2016 அன்று காலமானார்.
முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தி அடைய நாம் பிரார்த்தனை செய்வோம் !
நன்றி
நித்ரா தமிழ் நாட்காட்டி
COMMENTS