வறட்சியை சமாளிக்க செயற்கை மழை
வறட்சியை சமாளிக்க மஹாராஷ்டிரா மாநிலத்தில் செயற்கை ☔மழை பெய்ய வைக்க புவி அறிவியல் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது👏. நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இந்த வருடம் ☔மழை இல்லாததால் நாடு முழுக்க வறட்சி நிலவி வருகிறது😳. வறட்சியை சமாளிக்க 🏛மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது😯.அதில் ஒன்று தான், செயற்கை மழை☔. இதுகுறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் எம்.ராஜீவன் கூறுகையில்🎙,"செயற்கை மழை பெய்விக்க மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அங்கு மழை மேகங்களை உருவாக்குவதற்காக 200 மாதிரிகள் எடுக்கப்படுகிறது. இத்திட்டம் 3⃣ஆண்டுகள் செயல்படுத்தப்படும். இதற்காக 2⃣ஆய்வு ✈விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன". என்று கூறினார்.
மேலும், "ஒரு விமானம் மழை மேகம் உருவாக்கும் பணியை மேற்கொள்ளும், மற்றொன்று மழை மேகத்தை உருவாக்கும் பகுதிக்கான மாதிரியை எடுக்க பயன்படுத்தப்படும். வளி மண்டலத்தில் எரியும் தன்மையுடன் கூடிய புரோபேன் கியாஸ் மூலம் அயோடின் துகள்கள் தூவப்படும். இவை நீராவியை உருவாக்கும். பின்னர் அவை நீர்துகள்களாக மாறி மழையாக பொழியும்" என்று தெரிவித்தார்🔈.சீன நாடுகளில் இந்த செயற்கை மழை திட்டம் வெற்றிகரமாக மழையை பொழிய செய்துள்ளதாம்👍.சோலாப்பூரில் நடத்தப்படும் இந்த ஆய்வு வெற்றியடையும் பட்சத்தில் வறட்சி நிலவுகிற மற்ற பகுதிகளிலும் செயல்படுத்த படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது👍.
COMMENTS