4அரசு மருத்துவமனைகளில்🏥 குழந்தை👶 பராமரிப்பு மையம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை எழும்பூர் அரசினர் மகப்பேறு மற்றும் குழந்தைகள்👶 நல மருத்துவமனையில்🏥 சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவின் செயல்பாட்டினை இன்று ஆய்வு🔍 செய்தார்.
மரணத்தின் விளிம்பில் இருந்து காப்பாற்றப்பட்ட குழந்தைகளுக்கு பதக்கமும், பரிசு பொருட்கள் அடங்கிய பெட்டகமும், அக்குழந்தைகளின் தாய்மார்களுக்கு நினைவு பரிசும், சிறப்பாக பணிபுரிந்து வரும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு கேடயமும் வழங்கினர்.
தமிழகத்தில் வருடத்திற்கு 10 லட்சம் பிரசவங்கள் நடக்கின்றன. இவற்றில் 99% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் என்.ஐ.சி.யு- மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மேலும் நடப்பு ஆண்டில் பத்மநாபபுரம், பட்டுக்கோட்டை, பெரிய குளம், திருமங்கலம் ஆகிய அரசு மருத்துவமனையில் இளம் சிசு பராமரிப்பு மையங்கள் ரூ. 2 கோடியே 40 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.
வேலூர், திருநெல்வேலி, ஸ்டான்லி மருத்துவமனை, நாமக்கல், காஞ்சீபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 5 தாய்ப்பால் வங்கிகள் ரூ.50 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்🎙.
COMMENTS