தமிழகம் முழுவதும் இன்று (4-2-18) 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள், இணையதளங்கள் செயல்படாது: தெற்கு ரயில்வே_*
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று (4-2-18) 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் இணையதளங்கள் செயல்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கணிணி தகவல்களை சேகரிக்கும் பணி நடைபெற உள்ளதால் 4 மணி நேரம் சேவை பாதிக்கப்படும் என்றும் பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவை செய்து கொள்ளுமாறும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் இன்று மதியம் 2.05 முதல் 3.45 மணி வரையும், இன்று இரவு 11.30 முதல் 1.45 மணி வரையும் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் இணையதளங்கள் செயல்படாது எனவும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
.
கணிணிகளிலுள்ள தகவல்களை சேமித்து வைக்கும் பணியால் இணையதள சேவை முடக்கப்படுகிறது. எனவே கணிணி ஹேக்கர்களிடம் இருந்து தப்பிப்பதற்கான தொழில்நுட்ப அம்சங்களை கணிணியில் சேர்க்கும் பணி நடைபெற உள்ளது. எனவே இன்று ரயில்வே சேவையில் பாதிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் மற்றும் புயல் போன்ற பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பின் போது செய்யப்பட வேண்டியவை குறித்த கூடுதல் தகவல்களை கணிணியில் சேர்க்க வேண்டியுள்ளதால் இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட உள்ளது எனவும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது. எனவே ரயில் பயணிகள் இந்த குறிப்பிட்ட காலத்தில் டிக்கெட் புக்கிங் செய்யாமல் முன்கூட்டியே திட்டமிட்டு புக்கிங் செய்யுமாறு தெற்கு ரயில்வே பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.
COMMENTS