சதுரங்க வேட்டை-2' படத்தின் தாமதத்திற்கு காரணம் இதுதான்
என்.வி.நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி, திரிஷா ஜோடியாக நடித்துள்ள படம் 'சதுரங்க வேட்டை-2'. இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் படம் வெளியாகவில்லை. இந்நிலையில் இதற்கான காரணத்தினைஇப்படத்தை தயாரித்துள்ள மனோபாலா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, "நடிகர் அரவிந்த் சாமிக்கு இன்னும் கொடுக்கவேண்டிய சம்பள பாக்கி உள்ளதால் அவர் இன்னும் டப்பிங் பேசாமல் உள்ளார். முழு சம்பளமும் செட்டில் செய்த பிறகு பேச அவர் தயாராக உள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
COMMENTS