சென்னையின் அசுத்தமான கடற்கரை பட்டியலில் மெரினா முதலிடம்
🏙சென்னையின் அசுத்தமான கடற்கரைகள் பட்டியலில்📄 மெரினா முதலிடம் பிடித்துள்ளதாக😳 ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில்🌊 கடலில் குளிப்பதால் உடலுக்கு பல்வேறு உபாதைகள்🤕 வரும் என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கடல் ஆராய்ச்சி மையம்🏢 சார்பில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், எண்ணூர், கோவளம் ஆகிய கடற்கரை🌊 குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த 5⃣ பகுதிகளில் இருந்தும் கோடை மற்றும் மழைக்காலங்களில் சேகரிக்கப்பட்ட 192 மாதிரிகளை கொண்டு ஆய்வு:face_with_monocle: மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் மெரினாவில் இருந்து சேகரிக்கப்பட்ட நீரில் அதிகபடியான📈 மாசு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடையாறு மற்றும் கூவம் ஆறுகளின் வழியே சுத்திகரிக்கப்படாத கழிவுகள்😯 தொடர்ந்து கடலில் கலந்து வருவதால் பாக்டீரியா😟 உள்ளிட்ட நுண்கிருமிகள் அதிகரித்து நீர் மாசடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது🔊. ஐந்து மாதிரிகளையும் ஒப்பிடுகையில், கோவளம் பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட நீரில், குறைந்தளவு📉 மாசு கலந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது👍.
COMMENTS